ENTER

SLTJ கல்முனைக் கிளையின் வாழ்வாதார உதவி

அல்லாஹ்வின் கிருபையால் 16.04.2013 செவ்வாய்க் கிழமையன்று கல்முனை கிளையினால் ஏழைக்குடும்பம் ஒன்றிற்கு வாழ்வாதார உதவியாக ரூ. 2000.00 (இரண்டாயிரம்) வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

இந்நிகழ்வில் குறிப்பிட்ட குடும்பத்திற்கு கிளை சகோதரர்கள் மார்க்கம் சம்பந்தமான சில அறிவுரைகளையும் வழங்கினார்கள்.


Continue lendo

கல்முனை கிளையின் முதலாவது பெண்கள் பயான் நிகழ்ச்சி

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கல்முனைக் கிளையின் சார்பாக 15.04.2013 திங்கட்கிழமை அன்று சகோதரர் நிசார் அவர்களின் வீட்டில் முதலாவது பெண்கள் பயான் நிகழ்ச்சி இடம்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!

இதில் சகோதரர் ரஸ்மின் அவர்கள் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமான கொள்கை விளக்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

இந் நிகழ்வு 4.45 இலிருந்து 6.30 மணிவரை இடம்பெற்றது
இதில் பல சகோதரிகளும் தாய்மார்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.



Continue lendo

கல்முனையில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஓர் அறிமுக நிகழ்ச்சி


கல்முனைவாழ் தவ்ஹீத் சார்புடைய இயக்கங்களில் தஃவா பணிகளில் ஈடுபாடுள்ள சகோதரர்களுக்கு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தொடர்பான ஓர் அறிமுக நிகழ்ச்சி 14.04.2013 ஞாயிற்றுக்கிழமையன்று 4:30 மணியிலிருந்து இரவு 8 மணிவரை இடம்பெற்றது.

இதில் நாங்கள் தனித்து செயற்படுவது ஏன் என்ற தலைப்பில் உரை நிகழத்தப்பட்ட பின் கலந்து கொண்ட சகோதரர்களின் சந்தேகங்களுக்கு அல்-குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையிலும், அறிவுபூர்வமாகவும் பதிலளிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்!

இதில் அழைப்பு கொடுக்கப்பட்ட அதிகமான சகோதரர்கள் கலந்து பயன் பெற்றனர்.

இதில் சகோதரர் ரஸ்மின் தனித்து செயற்படுவதன் அவசியம் என்ற தலைப்பிலும், சகோதரர் கபீர் நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைத்ததாக நம்பியவன் முஷ்ரிக்கே என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.

இந்நிகழ்வை ஏற்பாடு செய்த சகோதரர்களுக்கு அல்லாஹ் நல்லருள் புரிவானாக!









Continue lendo

SLTJ கல்முனையின் ஏற்பாட்டில் மருதமுனையில் மல்டிமீடியா தஃவா-20.03.2013

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்...
இலங்கையின் சமகாலப் பிரச்சினை சம்பந்தமாக சகோதரர் ரஸ்மின் உரை நிகழ்த்திய ”இனவாதமும் இலங்கை முஸ்லிம்களும்” மற்றும் ”இலங்கை முஸ்லிம்கள் தாய் நாட்டிற்கு செய்த தியாகங்கள்” எனும் உரைகளை 20.03.2013 புதன் கிழமை அன்று இரவு இஷாவுக்குப்பின் எமது கல்முனை கிளையினால் மருதமுனை கடற்கரைத் திடலில் திரையிடப்பட்டது. இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ். இவ்வேற்பாட்டை செய்தவர்களுக்கு அல்லாஹ் நற்கூலியை வழங்குவானாக! ...




Continue lendo

மல்டிமீடியா தஃவா 15.03.2013

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்...
இலங்கையின் சமகாலப் பிரச்சினை சம்பந்தமாக சகோதரர் ரஸ்மின் உரை நிகழ்த்திய ”இனவாதமும் இலங்கை முஸ்லிம்களும்” மற்றும் ”இலங்கை முஸ்லிம்கள் தாய் நாட்டிற்கு செய்த தியாகங்கள்” எனும் உரைகளை 15.03.2013 வெள்ளிக்கிழமை அன்று இரவு இஷாவுக்குப்பின் எமது கல்முனை கிளையினால் கடற்கரைத் திடலில் திரையிடப்பட்டது. இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ். இவ்வேற்பாட்டை செய்தவர்களுக்கு அல்லாஹ் நற்கூலியை வழங்குவானாக!









Continue lendo

இன்ஷா அல்லாஹ் வருகின்ற வெள்ளக்கிழமை மல்டிமீடியா தஃவா


Continue lendo

டிஎன்டிஜேவின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் முகவரி

இன்றைய கால சூழ்நிலையில் ஃபேஸ் புக் என்பது அனைவரும் தங்களது கருத்துக்களை இணையதளத்தின் வாயிலாக பகிர்ந்து கொள்ளக்கூடிய வழிகளில் இன்றியமையாத ஒன்றாக ஆகிவிட்டது. இதை கவனத்தில் கொண்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத்தலைமையின் ஒப்புதலுடன் ஃபேஸ் புக்கில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றுக்கு தனித்தனியே அக்கவுண்ட்கள் திறக்கப்பட்டு அதன் வாயிலாக பிரச்சாரப்பணி வீரியமாக சென்றடைந்து வருகின்றது.
பக்கங்களின் முகவரி:
தமிழ் பக்கம்:
ஆங்கில பக்கம்:
மேற்கண்ட இரண்டு முகவரிகள் மட்டும்தான் மாநிலத்தலைமையின் அங்கீகாரம் பெற்ற முகநூல் பக்கங்கள் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இந்த பக்கங்கள் துவங்கப்பட்ட குறுகிய காலத்தில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இதில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். குறுகிய காலத்தில் இத்தனை ஆயிரம் உறுப்பினர்கள் டிஎன்டிஜேவின் இந்த ஃபேஸ் புக் பக்கத்தில் இணைந்துள்ளது டிஎன்டிஜே வழங்கும் செய்திகளை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மக்களுக்கு எந்த அளவு உள்ளது என்பதை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது.

காலச்சூழலுக்கு ஏற்ற பல பதிவுகள் மிகுந்த வரவேற்பையும் பெற்றது.
அதே நேரத்தில் சகோதரர் பீஜே அவர்களின் பெயரிலும் ஜமாஅத் பெயரிலும் பலர் முகநூலில் பக்கங்களை நிர்வகிக்கின்றனர். அவை அதிகாரப்பூர்வமானது அல்ல என்பதையும், மேற்கண்ட இவ்விரண்டை தவிர டி.என்.டி.ஜே.விற்கோ அல்லது பீஜே அவர்களுக்கோ எந்த பக்கங்களும் முகநூலில் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Continue lendo

இனவாதமும், இலங்கை முஸ்லிம்களும்.




இலங்கை நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள இனவாத சூழலில் நாடு முழுவதும் பல இடங்களில் பள்ளிகள் உடைக்கப்பட்டும், முஸ்லிம்களின் வியாபார நிலையங்கள் தாக்கப்பட்டும் முஸ்லிம்களுக்கு எதிரான செயல்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உண்மை இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ள நாம் இனவாத நேரத்தில் எப்படி நடந்து கொள்வது? என்பது பற்றி ஆற்றப்பட்ட உரை.

இனவாதமும் இலங்கை முஸ்லிம்களும் 01 
Continue lendo

போப்ஆண்டவர்ராஜினாமா: - மறைக்கப்பட்டஉண்மைகள்!

கிறித்தவ மதத்தின் மிகப்பெரிய பிரிவாக உள்ள கத்தோலிக்கப் பிரிவின் மதத் தலைமைப்பீடம் இத்தாலியில் உள்ள வாடிகனில் உள்ளது. இங்கு இருந்துதான் கத்தோலிக்க கிறித்தவர்களுக்கும், கிறித்தவ தேவாலயங்களுக்கும் உண்டான அனைத்து வழிகாட்டுதல்களும் உலகம் முழுவதும் சென்றடையும். அவர்களது மதத் தலைவரான போப் ஆண்டவர்தான் ஆன்மீக அந்தஸ்த்தில் முதலிடம் பெற்றவர் என்று கத்தோலிக்க கிறித்தவர்கள் நம்புகின்றனர்.

 போப் ஆண்டவராக கடந்த 2005ஆம் ஆண்டு பதவியேற்ற 16ஆம் போப் பெண்டிக்ட், தான் போப் ஆண்டவர் பதவியிலிருந்து ஓய்வு பெறப் போவதாக கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி அறிவித்தார். பிப்ரவரி 28ஆம் தேதியுடன் அவர் ஓய்வு பெற்றார்.

முதுமை மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக பதவியில் இருந்து  28ஆம் தேதி போப் 16ஆம் பெண்டிக்ட், பதவி விலகியதாக வாடிகன் செய்தித் தொடர்பாளர் பெடரிக்கோ லொம்பார்டி அறிவித்துள்ளார்.  600 ஆண்டுகால வரலாற்றில் போப் ஆண்டவர் பதவியை இதுவரை யாரும் ராஜினாமா செய்ததில்லை. இவர்தான் முதன் முறையாக அப்பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பதால் இது கத்தோலிக்க கிறித்தவர்களுக்கு மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போப் ஆண்டவர் பதவி என்பது சாதாரணமான பதவி அல்ல; பல கோடி கத்தோலிக்க கிறித்தவர்களுடைய ஆன்மீகத்தலைவர் பொறுப்பு என்பது மிக உயர்ந்த பொறுப்பாகும். அதிலிருந்து ஒருவர் தானாக ராஜினாமா செய்வது என்பது குதிரைக் கொம்புதான்.

இதற்கு முன்னால் உள்ள போப்கள் எல்லாம் கோமா நிலையில் பல நாட்கள் படுத்த படுக்கையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே போப் ஆண்டவர்  பதவியில் நீடித்து அதே நிலையிலேயே மரணித்துள்ள நிலையில், அதிரடி முடிவுகளை அவ்வப்போது அறிவித்து வந்தவரும், துணிச்சலான முடிவுகளை யாருக்கும் பயப்படாமல் எடுத்து, வலிமையானவராக   தற்போதும்  திகழ்ந்து கொண்டுள்ள 16ஆம் பெண்டிக்ட் அவர்கள் ஏன் திடீரென ராஜினாமா செய்ய வேண்டும் என்பதன் பின்னணியை நாம் ஆய்வு செய்வோமேயானால், பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவருகின்றன.

கிறித்தவ
மக்களாலேயேஎதிர்க்கப்பட்டஒரேபோப் :

இந்த போப் 16ஆம் பெண்டிக்ட் அவர்களுக்கென்று ஒரு தனிச் சிறப்பு உள்ளது. அதாவது கிறித்தவ மக்களாலேயே எதிர்க்கப்பட்ட ஒரே போப் இவர்தான். ஓரினச்சேர்க்கை புரிவது, அவ்வாறு ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும்  ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு சட்டப்பூர்வமாக சாஸ்திர சம்பிராதயங்களுடன்     தேவாலயங்களில் கிறித்தவ முறைப்படி திருமணம் முடித்து வைக்கும் கேவலங்களும் ஆன்மீகத்தின் பெயரால் அரங்கேறி வருகின்றன.

இந்தக் கேவலத்தை எதிர்த்த ஒரே போப் இவர் மட்டும்தான். ஓரினச்சேர்க்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், இந்தச் செயலானது சமூகத்தின் ஒழுங்கு நிலையை பாதிக்கும் எனவும்,  திருமணத்தின் சட்டரீதியான வரையறையை இத்தகைய அரசியல் மற்றும் கலாச்சார அமைப்புகள் மாற்றி அமைக்கின்றன என்றும் அதிரடியாக அறிவிப்புச் செய்தார்.

ஓரினச் சேர்க்கையாளர் திருமணம், திருமணத்துக்கு முன்னரே ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வது ஆகியவை கடுமையான பாவம் என்று தங்களுக்கு கீழ் வரும் ஆலயங்களில் வலியுறுத்துமாறு  எல்லா ஆயர்களுக்கும் அவர் கடிதம் மூலம் அறிவுறுத்தினார்.

இது கிறித்தவ மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேவாலயங்கள் அதிகாரப்பூர்வமாக ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்தை நடத்தி ஒழுக்கத்தை நிலைநாட்டி(?) வரும்போது, இவர் அதைத் தடுப்பது சரியில்லை என்றும், இவருக்கு எதிராக ஸ்பெயினில் போராட்டம் நடைபெற்றது;

ஓரினச்சேர்க்கையாளர்களாக உள்ள கிறித்தவர்கள் போப் வரவிருந்த சாலையில் ஒன்று திரண்டு ஒருவருக்கொருவர் முத்தம் கொடுத்துக்கொண்டு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து ஒழுக்கத்தை நிலைநாட்டிய(?) செய்திகள் அனைவரும் அறிந்ததே! அப்போதே அவரை பதவி விலகச் சொல்லி கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.

அதுமட்டுமல்லாமல், கருத்தடை செய்வதற்கு எதிராகவும் தனது கண்டனத்தைத் துணிவோடு இவர் பதிவு செய்தார்.

பாதிரியார்கள் செய்யும் பாலியல் அட்டகாசங்களை கண்டித்ததோடு மட்டுமல்லாமல், பாதிரியார்களால் சீரழிக்கப்பட்ட சிறுவர், சிறுமியர்களிடம் பகிரங்க மன்னிப்புக்கோரிய ஒரே போப்பும் இவர்தான்.

இப்படி இவர் செய்த சாதனைகள் நிறைய உள்ளன. இவர் செய்த சாதனைகள் எல்லாம் கிறித்தவ மக்களுக்கு சோதனையாகவும், வேதனையாகவும் அமைந்ததால் இவரை மிரட்டி, வலுக்கட்டாயமாக ராஜினாமா வாங்கியுள்ளனர் என்று தற்போது செய்திகள் வரத்தொடங்கியுள்ளன.

போப் ஆண்டவரது ராஜினாமா இயற்கையானது அல்ல என்றும், அதற்கு பின்னணியில் பல விஷயங்கள் உள்ளன என்றும், இத்தாலியில் உள்ள பத்திரிக்கைகள் உண்மையைப் புட்டுப் புட்டு வைத்தன. எங்கே குட்டு வெளிப்பட்டுவிடுமோ என்று அஞ்சிய இத்தாலியிலுள்ள வாடிகன் நிர்வாகம் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று சொல்லி கீழ்க்கண்ட அறிக்கையை கடந்த வாரம் வெளியிட்டுள்ளது :

இதுகுறித்து
, வாடிகன்அதிகாரிபெடரிக்கோலொபர்டியோகூறியதாவது:

போப் பதவி விலகுவது, 600 ஆண்டுகளாக நடக்காத ஒன்று. அவரது முடிவு குறித்து, பத்திரிகைகள் அவதூறாக செய்திகள் வெளியிட்டு வருகின்றன. இந்த வதந்திகள், திருச்சபைக்கு அதிக வருத்தத்தை அளித்துள்ளது. வாடிகனில், சில பாதிரியார்களது நடவடிக்கைகளில் அதிருப்தி யடைந்ததால்தான், போப் பதவி விலக தீர்மானித்ததாக, இத்தாலி நாட்டின், “லா ரிப்பப்ளிக்‘ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. சபையில், ஊழல்கள் பெருகிவிட்டதாக, சில பத்திரிகைகள் கூறியுள்ளன.

வாடிகனில் உள்ள சில கார்டினல்கள் குறித்தும், தவறாக செய்திகள் எழுதப்பட்டு உள்ளன. “புதிய போப்பை தேர்வு செய்வதற்கு கூட, சில கட்டுப்பாடுகள் கொண்டு வரவேண்டும்‘ என்றும், பத்திரிகைகள் எழுதி வருகின்றன. இவ்வாறு, பெடரிக்கோ லொபர்டியோ கூறியுள்ளார்.

மேற்கண்ட அறிக்கையின் மூலம் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று வாடிகன் நிர்வாகம் நிரூபித்துள்ளது. எந்தப் பிரச்சனையும் இல்லை என்றால், அதை போப் தனது வாயால் அறிவித்திருக்க வேண்டும். இந்த குற்றச்சாட்டுகள் உலகளாவிய அளவில் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையிலும் அதை மறுப்பதும்கூட வாடிகன் நிர்வாகம்தான் எனும்போது, இதுகுறித்த சந்தேகம் இன்னும் வலுக்கின்றது.

மேலும், போப் பதவி விலகிய கடைசி நாள் தனது ராஜினாமா குறித்து சொல்லப்படக்கூடிய குற்றச்சாட்டுக்களுக்கு மறுப்பளித்து உரை நிகழ்த்துவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அந்த குற்றச்சாட்டுகள் எதையும் அவர் தனது இறுதி உரையில் மறுக்கவில்லை. மாறாக அதை வலுப்படுத்தக்கூடிய விதத்தில்தான்  வார்த்தைகளை கூறினார். அதாவது தன்னை ஓய்வு பெறச் சொல்லி கடவுள் தனக்கு கட்டளையிட்டதாக சூசகமாக தெரிவித்துள்ளார்.

போப்பையே மிரட்டக்கூடிய அளவிற்கு எனக்குமேல் உள்ள கடவுள் என்னிடம் ராஜினாமா செய்யச் சொன்னதன் விளைவாக நான் ராஜினாமா செய்கின்றேன் என்பதுதான் இதன் பொருள். அந்த அளவிற்கு இவர் மிரட்டப்பட்டுள்ளார் என்பது இதன் மூலம் தெரியவருகின்றது.
·         ஓரினச்சேர்க்கைக்குஎதிர்ப்பு
·         /span>கருத்தடைக்குஎதிர்ப்பு
·         பாலியல்பாதிரியார்களுக்குஎதிர்ப்பு
·         பாதிரியார்களால்பாலியல்சேட்டைகளுக்குஆளாக்கப்பட்டவர்களிடம்மன்னிப்பு

என்று துணிச்சலான முடிவுகளை அறிவித்து அதிரடியாக ஆக்ஸனில் இறங்கிய இவர்தான் தற்போது பலவீனமாக உள்ளதாக கதை அளக்கின்றது வாடிகன் நிர்வாகம். இதுவரை வந்த போப்களிலேயே 16ஆம் பெண்டிக்ட் அவர்களைப்போல துணிச்சல் மிக்க, பலமான போப் யாரும் இருந்ததில்லை என்று அனைவரும் சொல்லும் வேளையில், இவர் ரொம்ப பலவீனம் அடைந்துவிட்டதால் ராஜினாமா செய்கின்றார் என்று வாடிகன் நிர்வாகம் அனைவரது காதிலும் பூச்சுற்றும் வேலையைப் பார்த்துள்ளது. 

கிறித்தவ ஓரினச் சேர்க்கையாளர்கள் மற்றும் கிறித்தவ பாதிரியார்கள் ஆகியோருக்கு எதிரான மேற்கண்ட அதிரடி அறிவிப்புகள் மட்டும் போப் எதிர்ப்பாளர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தவில்லை. மாறாக இஸ்லாம் குறித்து போப் 16ஆம் பெண்டிக்ட் கூறிய பல செய்திகள் கிறித்தவ மக்களை சிந்திக்க வைத்துள்ளது.

இஸ்லாம்
குறித்துபோப்கூறியகருத்துக்கள்:

·         இஸ்லாம்தான்இந்தஉலகில்அதிகமாகவளர்ந்துவரக்கூடியமார்க்கமாகஉள்ளது.
·         இஸ்லாமியர்கள்தான்பெரும்பான்மையானவர்களாகஇந்தஉலகில்தற்போதுமாறியுள்ளார்கள்.
·         இஸ்லாம்அபரிதமானவளர்ச்சியைதற்போதுஅடைந்துவருகின்றது;
·         இந்தநூற்றாண்டின்இறுதியில்இதைவிடஇன்னும்பலமடங்குஅதுவளர்ச்சியடையும்.

என்று இஸ்லாம் குறித்து இவர் சொன்ன கருத்துக்கள் உண்மையிலேயே துணிச்சலான கருத்துக்கள்தான்.

அதோடுமட்டுமல்லாமல், இஸ்லாத்தின் வளர்ச்சியை சிலாகித்துச் சொன்ன போப் அவர்கள் கிறித்தவ மக்கள் மத்தியில் நிலவக்கூடிய தவறான நம்பிக்கைகளையும் போட்டு உடைத்தார்.
போப் 16ஆம் பெண்டிக்ட் எழுதி வெளியிட்ட நூல், “jesus of nazareth the infancy narratives” (ஜீஸஸ் ஆஃப் நாசரேத்) ஆகும். இந்த நூலில் இயேசு குறித்த பல உண்மைகளை துணிச்சலோடு இந்த உலகிற்கு அறிவித்தார்.
அந்தப்புத்தகத்தில்அவர்அளித்தஅதிர்ச்சிகரமானதகவல்கள்பின்வருமாறு:
·        

டிசம்பர் 25ஆம்தேதியைஇயேசுவுடையபிறந்தநாள்என்றுகிறித்தவர்கள்கொண்டாடுகின்றார்கள். அதுதவறு.
·         இயேசுடிசம்பர் 25ஆம்தேதிதான்பிறந்தார்என்பதற்குஎவ்விதமானஆதாரமும்இல்லை.
·         இயேசுபிறந்ததுமாட்டுத்தொழுவத்தில்தான்என்பதுதவறு. அதற்கும்பைபிளில்ஆதாரம்இல்லை.
·         இயேசுபிறக்கும்போதுதேவதைகள்வந்தார்கள்என்றுசொல்லப்படுவதற்கும்ஆதாரம்இல்லை.
·         இயேசுபிறந்தவருடம்என்றுசொல்லப்படக்கூடியவருடத்தையும்தவறாகத்தான்சொல்லியுள்ளார்கள், அதுவும்தவறு.

என பல விஷயங்களை துணிச்சலோடு சொல்லக்கூடிய அளவிற்கு துணிவும், தைரியமும் கொண்ட ஒரே போப்பாக இவர் திகழ்ந்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், பர்னபாஸ் என்ற இயேசுவின் சீடர் எழுதிய செய்திகள் அடங்கிய ஒரு புராதன பைபிள் ஒன்று சென்ற 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் துருக்கியில் கண்டெடுக்கப்பட்டது. அதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்த முன்னறிவிப்புகள் உள்ளன என்றும், இயேசு சிலுவையில் அறையப்படவில்லை  என்ற செய்திகளும் உள்ளது என்றும் பல உண்மைகள் வெளிவந்தன. அப்போது அந்த பைபிளை, தான் பார்க்க விரும்புவதாக வெளிப்படையாக அறிவித்தார் போப் 16ஆம் பெண்டிக்ட்.

இப்படி இஸ்லாத்திற்கு ஆதாரவாகவும், கிறித்தவத்திற்கு எதிராகவும் உண்மையைச் சொன்னதும்கூட இவரை ராஜினாமா செய்யச் சொல்லி மிரட்டக்கூடிய அளவிற்கு கொண்டு சென்றுள்ளது என்பதுதான் தற்போது நடுநிலையாளர்களின் ஒரே கவலை.

எது எப்படியோ பாமர மக்களைக் காட்டிலும் படித்த பாதிரியார்களுக்குத்தான் எது சத்தியம் என்பது தெளிவாக தெரிந்திருக்கும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அந்த வகையில் கிறித்தவர்களின் மத நம்பிக்கையில் உள்ள குறைபாடுகளும், இஸ்லாம்தான் சரியான மார்க்கம் என்ற சத்தியமும் இந்த போப் 16ஆம் பெண்டிக்ட் அவர்களது மனசாட்சிக்கு தெரிந்திருக்கும்.

அவர் கூடிய விரைவில் இஸ்லாத்தைத் தழுவி  முஸ்லிமாக  மரணிக்க  அவருக்காக நாம் பிரார்த்தனை செய்வோம்.

கிறித்தவர்கள்
சிந்திக்கவேண்டியதருணம் :

கத்தோலிக்க கிறித்தவர்கள் தங்களது ஆன்மீகத்தலைவராக போப் ஆண்டவரை நம்புகின்றனர். அவரது பிரார்த்தனை இருக்குமேயானால், நமக்கு அவரது ஆசி மூலம் அனைத்தும் கிடைத்துவிடும் என்றும் நம்புகின்றனர்.

மனிதனுக்கு மிஞ்சிய மாபெரும் ஆற்றலும், கடவுள் தன்மையும் அவருக்கு உள்ளதாக கிறித்தவர்கள் நம்புகின்றார்கள். பரிசுத்த ஆவி அவர் மீது மேலாடுவதாகவும் நம்புகின்றனர். அதனால்தான் தங்களது நோய் தீருவதற்கும், தங்கள் வாழ்வில் நல்லவைகள் நடப்பதற்கும் அவரிடத்தில் இவர்கள் கையேந்தும் நிலை உள்ளது.

இப்படி இவர்கள் நம்பிக் கொண்டிருக்கும் நிலையில், இவர்கள் நம்புவதற்கு ஏற்றாற்போல ஆற்றல்களுடன் போப் ஆண்டவர் உள்ளாரா என்பதை அவர்கள் சிந்திக்க மறந்துவிட்டனர்.

போப் ராஜினாமா செய்வதற்கு வெளியே சொல்லாத பல காரணங்கள் இருந்தபோதும், வாடிகன் நிர்வாகம் வெளிப்படையாக கூறியுள்ள காரணத்தை முதலில் எடுத்துக் கொள்வோம்.

முதுமை மற்றும் உடல்நலக்குறைவு காரணமாகத்தான் அவர் பதவி விலகுகின்றார் என்பதே அவர்கள் கூறிய காரணம். அப்படியானால் அனைத்து ஆற்றலும் பெற்ற ஓர் ஆன்மீகத்தலைவர், பல அற்புதங்கள் செய்ய சக்தி பெற்றவராக அவர்களால் கருதப்பட்ட போப் ஆண்டவர், தனது சிறப்பு(?) பிரார்த்தனையின்  மூலம் ஆயிரக்கணக்கானவர்களது நோயை நீக்கி வைத்ததாக அவர்கள் கருதக்கூடிய போப் ஆண்டவர், தற்போது அவருக்கு ஏற்பட்டுள்ள முதுமை மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக போப் பதவியை ராஜினாமா செய்திருக்கின்றார் என்றால், இவர்களது இவ்வளவுகால நம்பிக்கை தரைமட்டமாக்கப்பட்டு தவிடுபொடியாக ஆக்கப்பட்டுள்ளதா, இல்லையா?

தனக்குத்தானே தனது முதுமையை போக்கிக் கொள்ள இயலாத, தனது உடல் நலக்குறைவை சரி செய்து கொள்ள இயலாத போப்களா இத்தனை நாட்கள் அனைவரது நோயையும் தீர்த்து வைத்தார்கள் என்று கிறித்தவ சகோதரர்கள் ஏன் சிந்திக்க மறுக்கின்றார்கள்?

இரண்டு வருடங்களுக்கு முன்பு சுற்றுலா சென்ற இடத்தில் வழுக்கி விழுந்து போப் ஆண்டவரது கை உடைந்ததே! அவர் தன்னுடைய உடைந்த கையை சரி செய்வதற்கு எந்த ஜெபக்கூட்டத்திற்குமோ, எந்த அற்புத பெருவிழாவுக்கோ செல்லவில்லை. மாறாக அங்கிருந்த மருத்துவமனைக்குச் சென்றுதான் கட்டுப்போட்டுவிட்டு வந்தார்.

அனைவருக்கும் ஆசி வழங்கக்கூடிய தனது கை உடைந்தபோது, பிறருக்கு ஆசி வழங்கக்கூடிய அவரது கையால் அவரது கைக்கே ஆசி வழங்க இயலவில்லை எனும்போது, இவரது கையை வைத்து பிறருக்கு எப்படி இவர் ஆசி வழங்குவார் என்று கிறித்தவ சகோதரர்கள் நம்ப மறுப்பது ஏன்?

போப்  அவர்கள் ஆண்டவர் என்று அழைக்கப்பட்டாலும் அவர் அனைத்து நிலைகளிலும் மனிதனாகத்தான் இருந்துள்ளார். அவர் மனிதன் என்பதை நிரூபித்தும் வருகின்றார் என்று தெள்ளத்தெளிவாக யாருக்குத் தெரிகின்றதோ இல்லையோ, போப் பதவியிலிருந்த 16ஆம் பெண்டிக்ட் அவர்களுக்கு தெளிவாகத் தெரிந்தே இருக்கும். அதனால்தான் அவர் பல உண்மைகளைப் போட்டு உடைத்துள்ளார். போப்புக்கு தெரிந்த உண்மையை கிறித்தவ சகோதரர்களும் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான் நமது ஆவல்.

குற்றச்சாட்டை
உறுதிப்படுத்தும்அடுத்தஆதாரம்:

கடந்த 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் போப் ஆண்டவரின் கடிதங்களை திருடி ஒரு பத்திரிகையாளரிடம் கொடுத்த வாடிகன் சமையல்காரருக்கு 18 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கியான்லுகி நுஸி என்ற பத்திரிகையாளர் அண்மையில் ரோமன் கத்தோலிக்க தேவாலய தலைமையகத்தில் நிலவும் உட்பூசல் மற்றும் ஊழல் பற்றி புத்தகம் எழுதியிருந்தார். இந்தப் புத்தகத்துக்காக போப் ஆண்டவரின் கடிதங்களை போப் மாளிகை சமையல்காரரான பாலோ கேப்ரியல் திருடிக் கொடுத்துள்ளார். இது தொடர்பாகக் கைது செய்யப்பட்ட பாலோ கேப்ரியல் மீதான வழக்கு விசாரணை வாடிகன் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, போப்பின் கடிதங்களைத் திருட வேண்டும் என்பது என் நோக்கமல்ல. வாடிகனில் நிலவும் கெடுதல்கள் மற்றும் திருச்சபைகளில் நடக்கும் ஊழல் குறித்து போப் ஆண்டவருக்குத் தெரிவிக்கப்படுவதில்லை என்று நான் கருதினேன். இந்தப் புத்தகம் மூலம் அங்குள்ள பிரச்னைகளைப் பகிரங்கப்படுத்தி, தேவாலயம் சரியான பாதையில் செல்லவே அவரது கடிதங்களை எடுத்துக் கசிய விட்டேன்' என்று பாலோ கேப்ரியல் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்.

இவ்வழக்கில் பாலோ கேப்ரியலுக்கு 18 மாதச் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி கியசப்பே டெல்லா தீர்ப்பளித்தார்.

மேற்கண்ட சம்பவத்தில் பாதிரியார்கள் செய்யும் திருகுதாளங்கள் மற்றும் ஊழல்கள் சம்பந்தமாக போப் வைத்திருந்த ஆவணங்களை வாடிகனில் உள்ள சமையல்காரர் திருடியுள்ளார். அதில் பாதிரியார்களின் பலான செய்திகள் மற்றும் ஊழல்கள் குறித்த செய்திகள் உண்மைப்படுத்தப்பட்டுள்ளன. அதை வைத்துத்தான் சிறப்பு புத்தகத்தை  கியான்லுகி நுஸி என்ற பத்திரிகையாளர் எழுதியுள்ளார். இது போப் பதவி விலக சொல்லப்பட்ட காரணங்களில் முக்கிய காரணமாக சொல்லப்பட்டது. இதை நாம் சொல்லவில்லை. இத்தாலி பத்திரிக்கைகளே பல மாதங்களுக்கு முன்னர் சொல்லிவிட்டன. அவ்வாறு இத்தாலி பத்திரிக்கைகள் சொன்ன செய்திகளை ஏற்கனவே வாடிகன் நிர்வாகம் மறுத்தது. இப்போது அது உண்மையாகியுள்ளது.

இதோ
அதுகுறித்துமுன்னர்வந்தசெய்தி :

போப்பாண்டவர்
ராஜினாமாசெய்வதாகவந்தசெய்திக்குவாடிகன்கண்டனம்!

கத்தோலிக்க கிறிஸ்தவ தலைவர் போப்பாண்டவர் தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக இத்தாலி பத்திரிக்கைகள் வெளியிட்ட செய்தியை, வாடிகன் அதிகாரிகள் மறுத்துள்ளனர். இத்தாலி பத்திரிக்கையான லிபெரோ நாளிதழில் முதல் பக்கத்தில் வெளியான செய்தி உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்பத்திரிக்கையின் நிருபர் ஆண்டோனியா சோச்சி என்பவர் அந்த பரபரப்பான செய்தியை எழுதி இருந்தார்.

அதில், உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப்பாண்டவர் 16ம் பெனடிக்ட் வயோதிகம் காரணமாக உடலளவில் பலவீனமாக உள்ளார். மேலும் உலகளவில் கத்தோலிக்க பாதிரியார்கள் மீது எழுந்து வரும் பாலியல் குற்றச் சாட்டுகளால், போப் மனமுடைந்து காணப்படுகிறார். அதனால் வரும் 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவருக்கு 85 வயது நிறைவடைந்த உடன், போப் பதவியை ராஜினாமா செய்துவிடுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மற்ற இத்தாலி பத்திரிக்கைகள் சிலவற்றிலும் இந்தச் செய்தி வெளியாகி இருந்தது. டைம்ஸ் பத்திரிக்கையில் வெளியான செய்தியில் பல நாடுகளில் 170க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாலியல் துன்பறுத்தல் வழக்குகளில் கத்தோலிக்க பாதிரிமார்கள் சம்பந்தப்பட்டு உள்ளனர். இதை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட போப்பின் முயற்சிகள் தோல்வியுற்றதால், அவர் ராஜினாமா முடிவுக்கு வந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்தச் செய்திகளை வாடிகன் அதிகாரிகள் கடுமையாகக் கண்டித்துள்ளனர்.

இதுகுறித்து
வாடிகன்நகரசெய்தித்தொடர்பாளர்பாதிரியார்பிடரிக்கோலோம்பார்டிகூறியதாவது:

போப்பின் உடல்நிலை மிக சிறப்பாக உள்ளது. அவருக்கு தனது பதவியை ராஜினாமா செய்யும் எந்த எண்ணமும், தேவையும் இதுவரை ஏற்படவில்லை. ஜெர்மனிக்கு சென்றபோதும் அவருக்கு எந்த உடல்நலக் குறைவும் ஏற்படவில்லை. அவருக்கு எதிராக எழும் எல்லா சிக்கல்களை மேற்கொள்ளும் திறமை அவரிடம் உள்ளது. ராஜினாமா குறித்த தகவல்களை எழுதியவர்களிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ போப்பிற்கு எந்த பாதிப்பும் இதுவரை இல்லை. அவர் நல்ல உடல்நலத்துடன் உள்ளார், என்றார்.

இதுகுறித்து
செய்திவெளியிட்டநிருபர்ஆண்டோனியோகூறியதாவது:

இந்த வதந்தியை கிளப்பி விட்டதே, வாடிகன் நகரத்தைச் சேர்ந்தவர்கள்தான். ராஜினாமா செய்வது குறித்த தகவலை, போப் இதுவரை மறுக்கவே இல்லை, என்றார்.

அதாவது பாலியல் சேட்டைகள் செய்யும் பாதிரிகளையும், ஊழல் பெருச்சாலிகளையும் ஒழிக்க இயலவில்லை. இவர்களுக்கு தலைமைதாங்கி இனிவேலையில்லை என்று பாதிரியார்கள் மீது கொண்ட வெறுப்பின் காரணமாக 85 வயது முடிந்தவுடன் போப் ராஜினாமா செய்யப்போவதாக இதற்கு முன்பே இத்தாலி பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுவிட்டன.

இப்போது எப்படி வாடிகன் நிர்வாகம் நாம் சொல்லக்கூடிய காரணங்களை மறுத்து அறிக்கை வெளியிட்டார்களோ அதுபோல அப்போதும் வாடிகன் நிர்வாகம் அதை மறுத்து போப் நல்ல உடல்நிலையில் உள்ளார்; அவர் ராஜினாமா செய்யவுள்ளதாக வரும் செய்திகள் அனைத்தும் வதந்திகள்  என்று செய்தி வெளியிட்டது.

ஆனால் இப்போது பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. ஏற்கனவே போப் ராஜினாமா தொடர்பாக பத்திரிக்கைகள் வெளியிட்ட செய்திகளை வாடிகன் மறுத்தது. ஆனால் வாடிகன் நிர்வாகம் மறுத்த விஷயம் இப்போது நடந்துவிட்டது. போப் ராஜினாமா செய்துள்ளார். இப்போது வாடிகன் நிர்வாகம் ஏற்கனவே மறுத்த செய்தி உண்மையாகிவிட்டது. இதன் மூலம் வாடிகன் நிர்வாகத்தின் அறிவிப்பு பொய் என்பதும் நிரூபணமாகியுள்ளது.

அதுபோல தற்போது வாடிகன் நிர்வாகம் மறுத்துள்ள போப் குறித்த செய்திகளும் உண்மை என்பது கூடிய விரைவில் தெரிந்துவிடும். இன்ஷா அல்லாஹ்...
Continue lendo

குருநாகல் தல்கஸ்பிடிய கிளையில் நிர்வாகத் தேர்வு


குருநாகல் தல்கஸ்பிடிய கிளையில்  நிர்வாகத் தேர்வு நேற்று (06-03-2013) இரவு, ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்திலிருந்து வருகை தந்த தலைமை நிர்வாகிகளின் முன்னிலையில் நிர்வாகத்தெரிவு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை எம்.ஏ.ஹபீழ் ஸலபி அவர்கள் துவக்கிவைத்தார்கள்.
2013-03-06-2226
 ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைவா் சகோ.ரியால் அவர்களின் அறிமுக உரையுயைத் தொடர்ந்து நிர்வாகிகளிடம் இருக்க வேண்டிய பண்புகளை ஜமாஅத்தின் துணைத் தலைவர் சகோ.பர்ஸான் அவர்கள் விளக்கினார். அடுத்து ஜமாஅத்தின் செயலர் அப்துர் ராஸிக் அவர்கள் நிர்வாகக் கட்டமைப்புப் பற்றியும் தஃவா முன்னெடுப்புகள் பற்றியும் அதற்கு எதிர்ப்புகள் வரும் போது சட்டரீதியாக அணுகும் முறை பற்றியும் தெளிவாக விளக்கினார்கள். இந்நிகழ்வில் அங்கத்தவர்களின் கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் அங்கத்தவர் அனைவரின் ஆலோசனையுடனும் முழுவிருப்பத்துடனும் பின்வரும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவர் – சகோ.எம்.எச். ஹஸன் – 07228293582, 0775354404
துணைத் தலைவர் – சகோ.எம்.எல்.ஏ.ரயீஸ் – 0771186110
செயலாளார்- சகோ.எஸ். பவாஸ் – 0772314714
பொருலாளர் – சகோ.எம்.எப்.பைஸல் -0779704704
துணைச் செயலாளர்- சகோ.எம்.எப்.பவ்ஸன் – 0770788881
ஆலோசனைக் குழு
எம்.ஏ.ஹபீழ் ஸலபி
சகோ.எம்.எம்.எம்.ஸூஹூத்
சகோ.ஏ.சீ.எம்.அர்ஷத்
சகோ.வை.எல்.முபாரக்
Continue lendo

விவாதச் சவடால் விட்ட தாருஸ்ஸூன்னா பதில் தராது புறமுதுகிட்டு ஓட்டம்! பூச்சாண்டி காட்ட நினைத்தேரரின் போலிமுகம் புஷ்வானமானது!


அக்கறைப்பற்று அன்ஸார் (தப்லீகி) மற்றும் அமீருல் அன்ஸார் (மக்கி) ஆகியேரரின் சிந்தனைக்குள் சிறைப்பட்டு﹐ ‘ஷெய்க்’ எதைச் சொன்னாலும் மார்க்கம் தான் என்ற குருட்டு நம்பிக்கையில் கட்டுண்டு கண்மூடிப் பின்பற்றும் ‘தக்லீத்’ அமைப்பாகிய சம்மாந்துறையில் இயங்கும் ‘தாருஸ் ஸூன்னா அல் இஸ்லாமிய்யா’ கடந்த வருட இறுதிப் பகுதியில் எமக்கு விவாத அழைப்பு விடுத்தனர். அவர்களின் விவாத அழைப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஒப்பந்தம் செய்வதற்காய் தாருஸ் ஸூன்னாவின் வளாகம் நோக்கி சென்றது. 
‘அறிவிப்பாளர் வரிசை சரியாக அமைந்திருந்தாலும் அதன் கருத்து அல்குர்ஆனுக்கு முரண்படும் எனில் அந்த செய்தி இட்டுக்கட்டப்பட்டதே!’﹐ ‘சுூனியத்தினால் பிரிதொரு மனிதனுக்கு பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்று நம்புவது தெளிவான ஷிர்க்காகும். இவ்வாறு நம்புபவர்கள் அப்பட்டமான முஷ்ரிக்குகளே!’ என்பது ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் அழுத்தமான வாதமாகும்.
நாம் மேற்குறித்த இரு கருத்துக்களையும் மக்கள் மன்றத்தில் எடுத்துச் சொன்ன போது﹐ அன்ஸார் (தப்லீகி) உள்ளிட்ட பல வேக்காடுகள் சிறுத்தையாய் சீறியெழுந்தனர். தணல் பட்ட உடம்பாய் குதித்து நின்றனர். ‘ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சுத்த வழிகேடர்கள்! நவீன முஃதஸிலாக்கள்! பீ.ஜே யை தக்லீத் செய்யும் முகல்லிதுகள்! ஹதீஸ் கலை அறியா அரைகுறைகள்!’ என்றெல்லாம் புழுதியை எம்மீது வாரி இரைத்தார்கள். முஸ்லிம்களை முஷ்ரிக்குளாக்கும் கூட்டம் என பெரரிந்து தள்ளினார்கள்.
மக்கள் மன்றத்தில் எமக்கெதிராய் எந்த விமர்சனக் கணைகளை வீராப்பாய் எடுத்து வைத்தீர்களோ அவ்விரண்டு தலைப்புகளையும் எமது விவாதத் தலைப்பாக ஆக்கிக் கொள்வோம். அதில் ‘ஆதார புூர்வமான ஹதீஸ்கள் அல்குர்ஆனுக்கு முரண்படுமா?’ என்பதை முதல் தலைப்பாகவும்﹐ ‘சுூனியம்’ குறித்த தலைப்பை அடுத்த நாளும் விவாதத்துக்குரிய தலைப்பாக வைத்துக்கொள்ளலாம் என்பதை காரண காரியங்களை அடிப்படையாகக் கொண்டு தெளிவு படுத்தினோம்.
‘முடியாது! சுூனியம் குறித்த தலைப்பில் மாத்திரம் விவாதிப்பதாய் இருந்தால் ஒப்பந்தத்தை தொடர்வோம். இல்லையென்றால் இத்தோடு விவாத ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வோம்!’ என்று ‘ஆளைவிட்டால் போதும்’ என்று விலாங்கு மீனாய் நழுவி ஓடினார்கள் அமீருல் அன்ஸாரியும் அவரின் முகல்லிதுக் கூட்டம் தாருஸ் ஸூன்னாவும். விவாத ஒப்பந்த னுஏனு யை எமது இணையதலத்தில் பார்வையிட்ட பொது மக்கள்﹐ சிறுத்தையாய் சீறி எழுந்தவர்கள் பெட்டிப்பாம்பாய் அடங்கிப்போனதை கண்டு ஆச்சரியப்பட்டார்கள். சொல்லம்புகளால் கீறிக்கிழித்தார்கள். வேதனை தாங்க முடியாது பரிதவித்த தாருஸ்ஸூன்னா அமைப்பினர்﹐ மண்ணில் விழுந்தும் மீசையில் மண் படியவில்லை என்ற கதையாய் தங்களை காட்டிக் கொள்வதற்காய் மீண்டும் ஒரு விவாத அழைப்பினை கடந்த 18-01-2013 அன்று எமக்கு விடுத்தனர்.
‘ஆதாரபுூர்வமான ஹதீஸ்கள் அல்குர்ஆனுக்கு முரண்படுமா? என்ற தலைப்பில் நாம் உங்களோடு விவாதம் புரிய தயார். ஏனெனில் உங்கள் கொள்கை படு பயங்கர வழிகேடாகும்.’ என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர்.
ஏலவே﹐ இத்தலைப்பில் விவாதிக்க முடியாது என்று ஒப்பந்தத்தில் வைத்து விரண்டோடிய தாருஸ்ஸூன்னா அமைப்பினர்﹐ தாங்கள் இதற்கு முன் எம்மோடு விவாத ஒப்பந்தம் செய்ததையோ﹐ அதில் அவர்கள் பின்வாங்கியதையோ குறிப்பிடாது இருட்டடிப்பு செய்திருந்ததை அவர்களுக்கு உணர்த்தும் விதமாயும்﹐ உங்கள் கடிதத்தில் பின்வரும் விடயங்களை உள்ளடக்கி அனுப்பி வைக்குமாறும் குறிப்பிட்டு ஒரு பதில் கடிதத்தை அனுப்பி வைத்தோம். உரிய முறையில் பதில் வந்தால் நாம் எந்நேரமும் விவாதிக்கத் தயார் என்றும் குறிப்பிட்டிருந்தோம். பின்வரும் விடயங்களை இணைத்து கடிதம் தருமாறு வேண்டினோம்.
1.நாம் தான் ளுடுவுது யை முதலில் விவாதத்திற்கு அழைப்பு விடுத்தோம்.
2.நீங்களும் எமது வளாகத்திற்கு ஒப்பந்தத்திற்காய் வந்தீர்கள்.
3.குர்ஆனுக்கு ஆதார புூர்வமான ஹதீஸ்கள் முரண்படுமா? என்ற தலைப்பில் விவாதிக்க முடியாது என்பதால் நாமே ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்கினோம். இதற்காக மன்னிப்புக் கேட்கிறோம்.
4.மீண்டும் இத்தலைப்பில் விவாதிக்க நாம் விரும்புகின்றோம்.
5.முதலில் நீங்கள் எமது இடம் வந்ததால்﹐ இவ்வொப்பந்தத்திற்கு நாம் உங்கள் இடத்திற்கு வருகிறோம்.
6.ஓப்பந்தத்தில் வைத்து விவாத தலைப்புகளை முடிவு செய்வோம்.
மேற்குறிப்பிட்ட விடயங்களை உள்ளடக்கியதாக எமக்கு கடிதம் அனுப்பும் பட்சத்தில் நாம் விவாதிக்கத் தயார் என்று 23-01-2013 அன்று அறிவித்திருந்தோம். இக்கடிதம் அனுப்பப்பட்டு இன்றோடு ஒரு மாதம் கடந்துவிட்டது. ஆனால்﹐ விவாத சவடால் விட்டவர்களிடமிருந்து இது வரைக்கும் எவ்வித பதிலையும் காணவில்லை.
மக்கள் மன்றத்தில் எம்மை வழிகேடர்களாய் சித்தரித்த தாருஸ் ஸூன்னா அமைப்பினர் தங்கள் கூற்றில் உண்மையாளர்களாய் இருந்தால் அதே மக்கள் மன்றத்தில் எம்மோடு விவாதிக்க வந்திருக்க வேண்டும்? சவால் விட்டுவிட்டு ஓடி ஒழியும் இவர்களின் தொடை நடுங்கித்தனம் இவர்கள் ‘அசத்தியவாதிகள்’ என்பதை அழுத்தமாய் அடையாளப்படுத்திவிட்டது. எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!
‘சத்தியம் வந்தது! அசத்தியம் அழிந்தது! அசத்தியம் அழிந்தே தீரும்! (17:81)
00123.01.2013-1
23.01.2013-2.jpeg
Continue lendo

எழுச்சியுடன் நடைபெற்ற குவைத் மார்க்க விளக்கக் கூட்டம்


pjதமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சார்பாக குவைத்தில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி 01.03.2013 அன்று வெள்ளிகிழமை மாலை 6.00 மனிக்கு நடைபெற்றது. இதில் மாநில தலைவர் பி ஜெய்னுல் ஆப்தீன் அவர்கள் கலந்து கொண்டு இஸ்லாத்திற்கு எதிராக உலகளாவிய சதி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்ட ஸ்கூலின் கொள்ளளவு சுமார் 600 முதல் 700 பேர் வரை ஆகும். நெருக்கி அமர்ந்தால் 1000 பேர் வரை அமரலாம்.
மக்கள் அதிகம் வந்துவிட கூடாது என்பதற்க்காகவே சகோ பீஜெ பேசு முன் கூட்டியே அறிவிப்பு செய்யப்படவில்லை.
கடைசியாக வெள்ளிகிழமை காலையில்தான் மெசேஜ் மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது. நிகழ்ச்சி ஆரம்பிக்கும் நேரத்தில் 1500 க்கு மேற்பட்டடோர் கூட்டம் நடக்கும் இடத்தில் குமிந்து விட்டனர்.
மார்க்க பிரச்சாரத்திர்க்கு இடையூறு செய்வதற்க்காகவே அமைப்பு வைத்துள்ளவர்கள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்த ஸ்கூல் நிர்வாகத்திடம் [அந்த ஸ்கூல் கிருஸ்த்துவ ஸ்கூல்] பிஜெ ஜெர்ரிதாமசுடன் ஆங்கிலத்தில் விவாதம் செய்த டிவிடியை கொடுத்து இவர் உங்களுக்கு எதிரானவர்கள் நீங்கள் அனுமதியை ரத்து செய்யாவிட்டால் பல கிருஸ்த்துவர்களை முஸ்லிமாக்கிவிடுவார்கள் அதோடு இவர்கள் பேசும் தலைப்பே கிருஸ்துவ உலகத்தை பற்றிதான் என ஒரு மார்க்கவிரோத பனியை செய்தனர்.
இதை கேட்டு திகைத்து போன அந்த பள்ளியின் முக்கிய நிர்வாகியான பென் கிருஸ்த்துவ பெண்மனி காசு வாங்கிவிட்டோமே என்ன செய்வது எதை சொல்லி தடுப்பது என யோசித்து கொண்டு இருந்த வேளையில்தான் கூட்டம் அதிகம் குவிந்துள்ளது என்ற செய்திகிடைத்ததும் கன்னியாஸ்திரி உடையோடே நேரில் வந்த அந்த பெண் நிர்வாகி நீங்கள் எங்களிடம் சொன்னதை விட பலமடங்கு மக்கள் வந்துள்ளார்கள் இது எங்க பள்ளியின் சட்டப்படி அனுமதிக்க இயலாது உடனே காலி செய்து கொள்ளுங்கள் என கோரிக்கை வைத்தார்கள்
இவர்கள் அனுமதித்தாலும் இந்த ஸ்கூலில் அனைவரையும் அடைத்து வைத்து நிகழ்ச்சி நடத்த இயலாது என முடிவு செய்யப்பட்டு உடனே மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது.
மக்களிடம் ஒரே ஒரு அறிவிப்புதான் செய்யப்பட்டது அனைவரும் புதிதாக ஏற்பாடு செய்யப்பட்ட இடத்திற்கு குழுமி விட்டனர். அந்தஹாலும் நிரம்பிவழிந்தது. அல்ஹம்துலில்லாஹ்
இந்த நிகழ்ச்சி நமது வெப்டிவி இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செயய்ப்பட்டது குறிப்பிடதக்கது
Continue lendo

”கமல் படம் எடுக்க வில்லை அமெரிக்க அரசியல் செய்துள்ளார்” இயக்குனர் மணிவண்னன் அதிரடி பேட்டி!

விஸ்வரூபம் படத்தை எடுத்து கமல் முஸ்லிம்களை இழிவுபடுத்தியுள்ளார், முஸ்லிம் பெண்கள் , மாணவர்களுக்கு அதன் மூலம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார், ஆப்கானிஸ்தானில் ஏராளமான குழந்தைகள் கொலப்பட்டது அனைவருக்கும் தெரியும் ஆனால் அமெரிக்கர்கள் எந்த குழந்தையும் கொலை செய்ய வில்லை என கமல் படம் எடுத்துள்ளார்.
இது அமெரிக்க அரசியலாகும் என நடிகரும் இயக்குனருமான மணிவண்னன் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

அந்த பேட்டியின் வீடியோ
Manivannan_0001
Continue lendo

அவதுாறு பரப்பிய JASM வகையறாக்கள் விவாதத்திலிருந்து விரண்டோட்டம்


இலங்கையில் அரபு நாட்டு ஏஜண்டுகள் பல தமக்குள் பிரிந்து பல கூறாகி மார்க்கத்தை குராபிகளிடம் அடகு வைத்து விட்டு, அவர்கள் ஆரம்பத்தில் எதிர்த்த அத்தனை பித்அத்களையும் வழிகேட்டையும் செய்வதற்கு பள்ளி கட்டி களம் அமைத்துக் கொடுத்து  தடம் புரண்டு கொண்டிருந்தனர்.
இந்த நேரத்தில் தவ்ஹீதைக் காக்க வேண்டும் என்ற அவாவில் இளைஞர் கூட்டம் ஒன்று ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைமையில் நாடலாவிய ரீதியல் கிளை பரப்பி சத்திய மர்க்கத்தை அதன் துாய வடிவில் தயவு தாட்சண்யமின்றி பிரசாரம் செய்ய களம் இறங்கியது.
அந்தத் தொடரில் குருநாகல் தல்கஸ்பிடியவில் துாய ஏகத்துவ ஏழுச்சி ஏற்பட்டு மார்க்க விடயங்களில் இளைஞர்களிடம் ஒரு தெளிவு பெறப்பட ஆரம்பித்துள்ளது. அவர்கள் அல்குர்ஆன் அதற்கு முரண்படாத ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மிகத் தெளிவாக கற்கத்துவங்கி,  தமது வணக்க வழிபாட்டைக் கூட கலப்படமற்ற துாய நபி வழி முறையில் செய்யது வருகின்றனர்.
இந்த சத்தியப் பிரசாரத்தைத் தடுப்பதற்காக அண்மைக் காலமாக அனைத்து வழிகெட்ட கூட்டங்களும் தமக்குள் நிகழ்த்தி வந்த போட்டி, பொறாமை, பனிப்போரை மறந்து நம்மை  எதிர்க்க ஒன்றிணைந்து அதர்ம யுத்தத்தை ஆரம்பித்துள்ளன. அதில், அபூபக்கர் ஸித்தீக் மதனி, அப்துல் வதுாத் ஜிப்ரி, போன்றோரும் அற்ப கிரயத்திற்காய் அல்லாஹ்வின் மார்க்கத்தை  விற்கும் சிலரும் சேர்ந்துள்ளனர்.
 இதனால் நாம் இந்தப் போலிகளை விவாதக் களத்தில் சந்தித்து இவர்களின் பொய்களையும் போலித் தனத்தையும் இவர்கள் தவ்ஹீதை விட்டுத் தடம் புரண்டுவிட்ட தடயங்களையும் அம்பலப்படுத்த பகிரங்க விவாத அழைப்பு விடுத்தோம்.
அறைக்குள் அப்பாவி மக்களுக்கு முன்னால் ஆடும் இவர்கள் பகிரங்கமாக விவாதக் களத்தில் எங்கள் மீது சுமத்தும் குற்றச்சாட்டை முன்வைக்க வேண்டும் என்று கேட்டு, நாம் நம்மை எதிர்போருக்கும் அவதுாறு பரப்புவோருக்கும் விவாத அழைப்புவிட்டு வருகின்றோம்.
 எமது தஃவாப் பாதையில் தப்லீக் ஜமாஅத் அவர்களது கொள்கையில் நம்பிக்கை வைத்து விவாதிக்க வந்தது. ஆனால், அரபு நாட்டு ஏஜண்டுகளுக்கு அவா்களின் கொள்கையில் அவர்களுக்கே நம்பிக்கை இல்லை என்பதால்,  எமது தனித்துவ தஃவா நகர்வால் இவர்களின் அசத்தியக் கோட்டைகள் தகர்ந்து சுக்கு நூறாகி வருவது அரபு நாட்டு ஏஜண்டுகளுக்கும் அவர்களின் ஏஜண்டுகளுக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்திவிட்டுள்ளது.
அதனால், தவ்ஹீத் ஜமாஅத்தையும் அதன் பிரமுகர்களையும் தரக்குறைவாக விமர்சினம் செய்து, பல்வேறு அவதுாறுகளைப் பரப்பி வருகின்றனர். நபி (ஸல்) அவர்களை மனநோயாளி எனக் கேவலப்படுத்தும் கட்டுக்கதைகளை நம்பும் இவர்கள் பெரும் பேடிகள் என்பதை மக்கள் தற்பொழுது புரிய ஆரமபித்தவிட்டார்கள்.
தஃவாக் களத்திலிருந்து ஒதுக்கப்ட்ட அப்துல் வதுாத் போன்றோரையும் தொண்டி விவாதத்தில் மண்டியிட்ட ரிஸ்வான் மதனியையும் இன்னும் சில காசுக்காக மார்க்க வியாபாரம் நடத்தும் மதனிகளையும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக இவர்கள் நடாத்தும் அதர்ம யுத்தத்தில் இணைத்துக் கொண்டு அறைக்குள் ஆட அன்ஸார் சுன்னா முஹம்மதிய்யா ஆரம்பித்துள்ளது.
தல்கஸ்பிடியவில் SLTJ கிளை ஆரம்பிக்கப்பட்டு தஃவா நல்லமுறையில் முன்னெடுக்கத் தொடங்கிய நாள் முதல் JASM என்ற நிதி நிறுவனம்  அவர்களது மவ்லவிமார்களை அழைத்து வந்து தல்கஸ்பிடியவில் பல்வேறு அவதூறுகளை பரப்பி PJ மீதும், SLTJ தாயிகள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்கள். அதேபோல் SLTJ விலிருந்து நீக்கப்பட்டவர்களையும் அழைத்து வந்து எமக்கு எதிராக அவதூறுகளை முடுக்கிவிட்டுள்ளனர். எனவே, நாம் இவர்களின் போலித்தனத்தையும் பொய்களையும் மார்க்க அறியாமையையும் மக்கள் மன்றத்தில் அம்பலப்டுத்துவதற்காக கடந்த மாதம் 23ம் திகதி விவாத அழைப்பை எழுத்து மூலமாக JASM வகையறாக்களுக்கு விடுத்தோம். இரண்டு வாரத்திற்குள் பதில் தருமாறு கேட்டிருந்தோம். அதற்கு அவர்கள் இதுவரை பதில் அளிக்க வில்லை.
இதற்கு மட்டுமல்ல இதுவரை இவா்கள் மார்க்கத்திற்காக எந்த விவாதக் களத்தையும் சந்தித்ததில்லை. அவதுாறை அள்ளிக் கொட்டுவார்கள். அதை எங்கள் முன்னால் சொல்லுங்கள் என்றால் விவாதக் களம் வரவே மாட்டார்கள். எனவே, இவர்களைவிடத் தாழ்ந்த  தரத்தில் உள்ள பொய்யர்கள் வேறு யாரும் இலங்கையில் இருக்கமாட்டார்கள். ஏனெனில், தப்லீக் ஜமாஅத்வாதிகள் கூட விவாதிக்க வந்தனர்.
தன்னைத் தக்லீத் பண்ணுவோருக்கு மத்தியில் மாவீரனாய் வேசம் காட்டும் JASMல் ஊழிய ஊதியம் பெறும் மவ்லவிகள் தவ்ஹீத் ஜமாஅத் தாயிகளைக் கண்டு வெருண்டு ஓடுவது ஏன்? அவர்களின் விவாத அழைப்புக்கு அஞ்சுவது ஏன்?!
மாற்று மதத்தினரிடம் இருக்கும் மதப் பிடிப்பின் அளவுவில் கடுகின் முனையளவு கூட JASM க்கும் இவர்களிடம் கூலிக்கு கூலைக் கும்பிடு போடுவோருக்கும் அவர்களின் கொள்கையில் உறுதி இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
 இவர்கள் வாதப்படி நாம் இருப்பது தவறான கொள்கை என்றால் அதைத் துணிவாக எமக்கு முன்னால் நாம் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளித்து விடை சொல்லி விவாதிக்க முன்வரவேண்டும். அதை விட்டுவிட்டு எதிர்க்கேள்வி கேட்கத் தெரியாத அப்பாவி அபலைகளுக்கு முன்னால் நீங்கள் எவ்வளவுதான் ஹீரோ வேசம் போட்டாலும் நீங்கள் (0) ஸீரோதான்.
 JASMல் கூலிக்கு மாறடிப்போர் போன்ற, குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும் இன்னும் சிலர்; பதுங்கியிருந்து படம் எடுக்கப் பார்க்கின்றனர். இன்னும் சிலர் மதம் பிடித்து மதியிழந்து ஆடிக் கொண்டிருக்கின்றனர். அறைக்குள் மட்டும் அடும் இவர்கள் விவாதிக்க வராததாலும் இவர்களின் போலித் தனத்தாலும் பொய் அவதுாறுகளாலும் நியாயத்தை சிந்திப்போர் உண்மையை உணர ஆரம்பித்துள்ளனர்.
அத்தோடு, தவ்ஹீத் என்ற போலி வேடமிட்ட புரோகிதர்கள் பல்வேறு சதி வேலைகளைச் செய்ய ஆரம்பித்தனர். அவர்கள் செய்த எல்லா சதிகளும் சத்தியத்திற்கு முன்னால் சரணாகதி அடைந்துகொண்டே வருகிறது. அல்ஹம்தலில்லாஹ்.
தல்கஸ்பிடிய JASM பள்ளியில் அப்துல் வதுாத் ஜிப்ரி SLTJ வை எதிர்த்துப் பேசும் போது BMICH விவாததத்திற்கு மஹப்பத்தின் அடிப்படையில் அறிஞர் பீஜே அவர்களை அழைத்து வந்ததாகக் கூறுகின்றார். மறுநாள் ஒருவர் போனில் பேசும் போது BMICH நடந்த விவாதத்திற்காகத்தான் அழைத்துவந்தேன் என்கிறார். இவருக்கு விவாதம் செய்யும் தகுதி இல்லாதால்தான் அழைத்து வந்தார் என்பது அன்றும் அனைவருக்கும் தெரிந்தது. SLTJவுடன் விவாதிக்க தயங்குவதாலும் தெளிவாகத் இன்றும் தெரிகிறது.
அதேபோல் பீஜே அவர்கள் அரபு மொழியிலிருக்கும் அல்குர்ஆனை இலங்கை மவ்லவிகளிடம் காட்டாமல்  மொழி பெயர்த்துள்ளார் என்கிறார். அதே உரையின் நடுப்பகுதியில் பீஜேவிற்கு அரபு தெரியாது என்கிறார். இன்னும் அவருக்கு அரபியில் கடிதம் எழுதத் தெரியாது என்கிறார். மீண்டும் அரபியில் கடிதம் எழுதினார் என்கிறார். இந்த முரண்பாடு ஒன்றே இவர் சொன்ன அனைத்தும் பொய் என்பதை அப்பட்டமாக அம்பலப்படுத்துகிறதல்லவா? ஒருவன் தனக்குத் தானே முரண்படுவது அவன் பொய்யன் என்பதற்கான முதல் ஆதாரமாகும்.
அவர் அரபு தெரியாமல் எப்படி அல்குர்அனை மொழி பெயர்த்தார்?  அரபு தெரியாது என்று அப்துல் வதுாத் தான் சொல்கிறார். அதே உரையில் மீண்டும் அரபியில் கடிதம் எழுதினார் என்கிறார். அரபு தெரியாது ஆனால் தெரியும் என்று தனக்குத் தானே முரண்படும் மூளையற்ற இந்த உளரல்களையாவது நீங்கள் சிந்தித்தால்  உண்மையை உணர்வீர்கள்!
  எனவே, அப்துல் வதுாத் ஜிப்ரி போட்டுள்ள ஜிப்பாவுக்கு ஏமாறாமல் உண்மையை நியாயமாக சிந்தித்து உணருமாறு அன்புடன் நாம் மக்களைக் கேட்டுக் கொள்கின்றோம். ஏனெனில்,அவரை அழத்து வருவோரும் இந்த நிலையில்தான் உள்ளனர் என்பது தெளிவாகிறது. அவரது உரையிலுள்ள உளரல்களையும் முரண்பாட்டையும் சிந்திப்போருக்கு நாம் பதில் சொல்லத் தேவை இல்லை.அவர்கள் தானாகவே உணர்ந்து கொள்வார்கள். சிந்திக்க மறுப்போருக்கும் சிந்திக்க மூளையை செலவிடக் கஞ்சத்தனப்படுவோருக்கும் உண்மை ஒருபோதும் விளங்குவதில்லை.
Continue lendo

SLTJ இன் புதிய கிளை கரம்பையில் ஆரம்பம்.


SLTJ இன் புதிய கிளை புத்தளம் மாவட்டத்தில் கரம்பையில் 03.03.2013 அன்று உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. அல்ஹம்து லிள்ளாஹ்.
SLTJ இன் வீரியமிக்க தஃவாப்பணியின் மூலம் பல்வேறு ஊர்களைச்சேர்ந்த சகோதரர்கள் எம்முடன் இனைந்து தஃவா மற்றும் சமூகப்பணிகளை மேற்கொள்வதற்காக புதிய கிளைகளை அமைத்து வருகின்றனர்.
கொள்கை விளக்கம் மற்றும் நிருவாக முறைகள் குறித்து தெளிவுபடுத்தப்பட்டது. கிளையின் பொறுப்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
01.          S.A இமாம் – 0712919982.
02.          M. சப்ரான் – 0713682992.
03.          A.அஸ்பர் –
04.          றிஸ்வி – 0717260167.
Continue lendo

SLTJ யின் சமூக சேவைப் பிரிவினால் மருத்துவ உதவி


SLTJ யின் சமூக சேவைப் பிரிவினால் விபத்துக்குள்ளாகி காயமுற்ற மாத்தரையைச் சேர்ந்த சிறுவனுக்கு ரூபா – 15000. மருத்துவ உதவி வழங்கப்பட்டது.
2
Continue lendo

SLTJ யின் சமூக சேவைப் பிரிவினால் தொழில் உதவி


SLTJ இன் சமூக சேவைப்பிரிவினால் மின்சாரத்தினால் பாதிக்கப்பட்ட. மாளிகாவத்தையைச் சேரந்த சகோதரருக்கு ரூபா – 16000. சிறு தொழில் செய்யும் பொருட்டு நிதி உதவி செய்யப்பட்டது.
1
Continue lendo

SLTJ சமூக சேவைப்பிரிவினால் மியன்மார் அகதிகளுக்கு உதவி


மீறியான பொலிஸ் தடுப்புக்காவலிலுள்ள மியன்மார் அகதிகள் 100 பேருக்கு SLTJ சமூக சேவைப்பிரிவினால் ரூபா – 80.000. பெருமதியான ஆடைகள்﹐ உலர் உணவுப் பொருட்கள். மற்றும் அத்தியவசியப் பொருட்கள். வழங்கிவைக்கப்பட்டது.
4321
Continue lendo
 

SLTJ Kalmunai Copyright © 2012 |OFFICIAL SITE OF SLTJ KALMUNAI BRANCH |